வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 15, 2018

தவறுகளை திருத்திக் கொள்ளும் வழிகள்


மனிதனுடைய இயல்புகளில் ஒன்று தவறிழைத்தல்
திருக்குர் ஆன் கூறுகிறது.
كَلَّا إِنَّ الْإِنسَانَ لَيَطْغَىٰ
சத்தியம், நீதி, நன்மை ஆகியவற்றின் எல்லைகளை தாண்டுவதே துஃயான் ஆகும்.
உதாரணத்திற்கு பொய் பேசுதல், திருடுதல், ஹராமான செயல்களை செய்தல் ஆகியவை துஃயான் ஆகும்.
மனிதர்களில் இதிலிருந்து முற்றிலுமாக தப்பிக்க இயலாது.
ஏதாவது ஒரு தடவையில் அநீதி இழைத்து விடுவோம். அசத்தியத்திற்கு துணையாகிவிடுவோம். ஒழுக்க கேடான காரியங்களை செய்து விடுவோம்.
அதற்காக வருத்தப் பட வேண்டும் ஆனால் விரக்தியடையந்து விடக்கூடாது.
நாம் நமது விசயத்திலும் அப்படி நடந்து கொள்ளக் கூடாது. பிறர் விசயத்திலும் அவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்பது போல நடந்து கொள்ளக் கூடாது.
திருக்குர் ஆன் வழங்கும் மிகப் பெரும் மகிழ்ச்சி    
 قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعاً إنه هو الغفور الرحيم [الزمر:53 

يقول ابن مسعود: إن أكبر آية فرجا في القرآن ( يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ

இந்த ஆயத்தில் எல்லை மீறுதல் என்பது கொலை செய்வதாகும்.

மக்காவின் காபிர்கள் , நாங்கள் கொலை எல்லாம் செய்தோமே இதற்குப் பிறகு இஸ்லாத்திற்கு  வந்து என்ன பயன் என்று கேட்டார்கள் அப்போது இந்த ஆயத் இறங்கியது.

عن ابن عباس( قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ ) وذلك أن أهل مكة قالوا: يزعم محمد أنه من عبد الأوثان, ودعا مع الله إلها آخر, وقتل النفس التي حرّم الله لم يغفر له, فكيف نهاجر ونسلم, وقد عبدنا الآلهة, وقتلنا النفس التي حرم الله ونحن أهل الشرك؟ فأنـزل الله( يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ )

எனவே எத்தகைய பெரும் தவறு நிகழ்ந்திருதிருந்தாலும் நிவாரணம் உண்டு,
தவறு செய்தவர்கள் குற்றவாளிகள் ஆவார்கள். ஆனால் மனிதர்கள் என்ற நிலையிலிருந்து வெளியேறிவிடமாட்டார்கள்.

அல்லாஹ் ரஸூலின் உத்தரவுகளுக்கு மாற்றமாக செய்யப் பட்ட பாவங்கள் ஆனாலும் மனிதர்களுக்கு இழைத்த பாவங்கள் ஆனாலும்  இரண்டிலிருந்தும் நிவாரணம் பெற முதன்மையாக தேவைப்படுவது

.தவறு செய்து விட்டோம் என்பதை உணர்வதாகும்.

كل ابن آدم خطاء وخير الخطائين التوابون } [رواه الترمذي
அடுத்ததாக தவறிழைப்பவர்கள் திருந்த வேண்டும் என்று நினைக்க வேண்டும். தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

திருந்தாவிட்டால் திருத்திக் கொள்ளாவிட்டால் என்ன நடக்கும் ?
1.   இதயம் கருத்து விடும்
2.   இதயத்தில் ஒரு பதற்றம் இருந்து கொண்டே இருக்கும். செய்த பாவம் யாருக்கும் தெரியாத வகையில் எத்தனை நுனுக்கமாக பாவம் செய்தாலும்..சரி,
3.   நன்மைகளுக்கான வாய்ப்பு குறைந்து விடும். தொழுவது பர்தா அணிவது துஆ கேட்பது குர் ஆன் ஓதுவது  ஹலால் ஹராமை பேணுவது சிரமமாக தெரியும்.

இந்த விபத்துக்க்கள் மிக மோசமானவை.

பாவங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பை பெற – சில வழிகளை அறீஞர்கள் குறீப்பிடுகீறார்கள்.

1.   தவ்பா
தவ்பா எனில் பாவத்தை விட்டு விலகுதல்تنزيه القلب من الذنب  என்று பொருளாகும்.

தவறாக டைப் செய்து விட்டால் டெலிட் என்ற ஒரு பட்டனில் அதை அழித்து விடுகிறோமே அது போன்றது தான் தவ்பா
மெபைல் போனில் தேவையற்ற மெசேஜ்களை டெலிட் என்ற ஒற்றை வார்த்தை அழித்து விடுகிறோம் அல்லவா
அது போல தவ்பா பாவத்தின் அடையாளத்தை உடனடியாக அழித்து விடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் .

 التائب من الذنب كمن لا ذنب له كما في حديث ابن ماجه وحسنه ابن حجر.

தவ்பா செய்து கொண்டே இருக்க வேண்டும், அனைவரும் . நல்லவர்கள் கூட.

நாம் முழு இஹ்லாஸுடன் அமல் செய்திருப்போம் என்று சொல்ல முடியுமா ?
அதற்காகவும் தவ்பா செய்து கொண்டே இருக்க வேண்டும்.

மலக்குகள் சொல்வார்கள்
இறைவா ! உன்னை வணங்க வேண்டிய அளவு நாங்கள் வணங்க வில்லை.
ال رسول الله - صلى الله عليه وعلى آله وسلّم-: «يوضع الميزان يوم القيامة فلو وزن فيه السموات والأرض لوسعت، فتقول الملائكة يارب لمن يزن هذا، فيقول الله تعالى لمن شئت من خلقي، فتقول الملائكة سبحانك ما عبدناك حق عبادتك


2.       இஸ்திஃபார்
தவ்பா பாவத்திலிருந்து விலகிய பிறகு அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பது பாவங்கள் மன்னிக்கப் பட காரணமாகும். திருந்துவதற்கான இரண்டாவது வழி இது.
பாவம் மன்னிப்பு கேட்பது அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானது.
சைய்யதுனா ஹஸன் ரலி அவரக்ள் ஒரு சபையில் அமர்ந்திருந்தார்கள் ஒரு இளைஞன் வந்து நான் பெரிய பாவி எனக்கு ஒரு அமலை கற்றுக் கொடுங்கள் என்றார். இஸ்திக்பார் செய் என பதிலளித்தார்கள். அதற்கடுத்து ஒருவர் எங்களூரில் மழையே இல்லை என்றார். இஸ்திக்பார் செய் என பதிலளித்தார்கள். அதற்கடுத்து ஒருவர் சாப்பாட்டுக்கு சிரமமாக இருக்கிறது என்றார். இஸ்திக்பார் செய் என பதிலளித்தார்கள். இன்னொருவர் வந்து தனக்கு குழந்தை இல்லை என்றார். இஸ்திக்பார் செய் என பதிலளித்தார்கள்
இன்னொருவர் வந்து எனது தோட்டத்தில் நல்ல விளைச்சலுக்கு  துஆ செய்யுங்கள் என்றார். இஸ்திக்பார் செய் என பதிலளித்தார்கள் இன்னொருவர் வந்து எனது வீட்டில் கிணறு தோண்டுகிறேன் நீரூற்று கிட்ட வேண்டும் துஆ செய்யுங்கள் என்றார். அவரிடமும் இஸ்திக்பார் செய் என பதிலளித்தார்கள்
சுற்றி இருந்தவர்கள ஆச்சரியரியத்தோடு எல்லாவற்றிற்கும்  ஒரே பதிலா என்றார்கள் .
ஹழரத் ஹஸன் ரலி அவர்கள் கூறீனார்கள் இது குர் ஆனில் உள்ளது தான் என்றார்கள்.

நூஹ் அலை இந்த தத்துவங்களை மக்களுக்குச் சொன்னதாக அல்லாஹ் கூறுகிறார். மனித சமூகத்திற்கு கூறப்பட்டுள்ள மிகப் பழைமையான அறிவுரை இது.

 فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا (10) يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُم مِّدْرَارًا (11وَيُمْدِدْكُم بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّاتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَارًا (12


3.  நற்செயல்கள் الحسنات الماحية  

தவறிழைதவர்கள் அதிகமதிகம் நன்மைகளை செய்ய முயற்சிப்பது சிறந்த திருந்தும் முயற்சியாகும்.

ஒளு முதல் ஹஜ் வரை ஒவ்வொரு அமலுக்கான நன்மையை குறிப்பிடும் போது அது பாவங்களை மன்னிக்கும் என்று சொல்வார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்.

الاسلام يهدم ما كان قبله

தாகத்தால் தவிக்கும் நாயுக்கு தண்ணீர் கொடுத்த விபச்சாரியின் பாவம் மன்னிக்கப் பட்டது என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


வீட்டில் அலுவலகத்தில் பள்ளீக் கூடங்களில் தவறிழைப் போரை தண்டிப்பதை விட நன்மையான வேலைகளில் ஈடுபடுத்துவது சிறப்பானது

2 ஜுஸ்வு குர் ஆன் ஓது! 10 ரகாத் தொழு 10 பேருக்கு உணவு கொடு 2 தெருக்களை சுத்தப் படுத்து  போன்ற தண்டனை வழி முறைகள் நல்ல மாற்றத்தை தரக் கூடியது

4.  பிறருக்காக துஆ செய்வது
دعاء المؤمنين للمؤمنين

நமது துஆக்கள் நமக்காக மட்டுமே இருக்க கூடாது.
பெற்றோர். உற்றார். பக்கத்து வீட்டுக்காரர்கள் நமது துஆவுக்குரியவர்கள் அனைவருக்காகவும் துஆ செய்யும் இயல்பு நம்மிடம் இருக்க வேண்டும்.
குர் ஆன் கற்றுத்தருகிறது.

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ (10

وعن ابنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُما: سَمِعْتُ النبيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسَلَّمَ يقولُ: ((مَا مِنْ رَجُلٍ مُسْلِمٍ يَمُوتُ، فَيَقُومُ عَلَى جَنَازَتِهِ أَرْبَعُونَ رَجُلًا لَا يُشْرِكُونَ بِاللَّهِ شَيْئًا، إِلَّا شَفَّعَهُمُ اللَّهُ فِيهِ)). رواهُ مسلِمٌ.

5.  மய்யித்களுக்கு ஈஸால் தவாபு செய்வது
ما يعمل للميت من اعمال البر
நன்மையான காரியங்கள் மூலம் இறந்தவர்களுக்கு நன்மையை சேர்க்க முடியும்.
அநாதைகளை ஆதரித்தல்
ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி செய்தல்
பள்ளிவாசல் மதரஸாக்களை உருவாக்குதல்
நோயாளிகளுக்கு உதவுதல்
நன்மையான விசயங்களுக்கு ஹெல்ப் தேவைப்படும் காரியங்கள் அனைத்திலும் உதவி செய்வது நமது பாவங்களை போக்கும்.


6.  துன்பங்களை சகித்துக் கொள்ளும் பொருமை
المصاءب اللتي يكقر الله بها الخطايا
சிரமங்களை சகித்துக் கொள்கிற போதும் அல்லாஹ் பாவங்களை மன்னிக்கிறான்.

فعن أبي سعيد وأبي هريرة -رضي الله عنهما- عن النبي -صلى الله عليه وسلم- قال((ما يصيب المسلم من نَصَب، ولا وَصَب، ولا هم، ولا حزن، ولا أذى، ولا غم، حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه))

(நஸபு : களைப்பு
வஸபு : வலி
ஹம்மு : எதிர்காலத்தைப் பற்றிய கவலை
ஹுஸ்னு : தவறிப்போனதைப் பற்றிய கவலை
கம்மு : பெருங்கவலை )

அறிஞர்கள் கூறுவார்கள்
ஒரு மனிதர் சாவியை ஒரு ஜோப்பில் வைத்தான். அதை தேடும் போது மற்ற ஜோப்பில் தேடினான், கிடைக்கவில்லை என்றவுடன் பதறினான். சுதாகரித்துக் கொண்டு அடுத்த ஜோப்பில் கை விட்டு ஆறுதல் அடைந்தான் எனில், முதலி ஏற்பட்ட பதற்றத்திற்கு கூட அல்லாஹ் அவனுக்கு கூலி தருவான்.

அல்லாஹ்விற்கு செய்கிற பாவங்களில் இருந்து விடுபட உதவும்  இதே காரியங்கள் மனிதர்களிடமிருந்து மன்னிப்பு பெறவும் உதவும்

ஒருவருக்கி தீங்கிழைத்து விட்டால் அவரிடமிருந்து மன்னிப்பு கிடைத்தால் மட்டுமே அல்லாஹ் மன்னிப்பான்,

மக்களிடமிருந்து மன்னிப்பு பெறவும் இதே 6 வழிகளை கடை பிடித்தால் மன்னிப்பை பெற்றுவிடலாம்.

முதலில் அவருக்கு செய்து கொண்டிருந்த தீமையை நிறுத்தனும்.
ஒருவருக்கு எதிராகவே பேசிக் கொண்டிருந்து விட்டு அவரிடமிருந்து மன்னிப்பு கிடைக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பது சரியல்ல.

இரண்டாவது அவரிடம் நேரடியாக மன்னிப்பு கேட்கனும்.
அதில் கூச்சப்படக் கூடாது.
பணியாளர்களிடம், உடன் வேலை செய்பவர்களிடம், அறிமுகமே அற்றவர்களானாலும் நம்மால் அவர்கள் துன்பமடைந்திருந்தால் மன்னித்து விடுங்கள் என்று கேட்பது அவர்களுடைய வலியை போக்காது என்றாலும் நிச்சயமாக ஆறுதல் தரும்.
நாம் வேனுமென்றே தீங்கிழைத்திருந்தாலும் கூட திருந்தி விட்டோம் என்பது நம்மை பற்றி அச்சப்படுவதை அவர்கள் நிறுத்திக் கொள்வார்கள்.
மூன்றாவது அவருக்கு முடிந்தவரை நன்மை செய்வது.
பண உதவி செய்வது, பரிந்துரைகள் செய்வது, அவரது குடும்பத்தை கவனித்துக் கொள்வது போன்ற நன்மையான காரியங்கள் நிச்சயம் அவரிடமிருந்து மன்னிப்பை பெற்றுத் தரும்.
நான்காவது அவருக்காக துஆ செய்வது. நேரிலும் மறைமுகமாகவும்.
துஆவுக்கு பணியாத ஆட்கள் இல்லை.
மிகவும் களைப்பாக உட்கார்ந்து இருக்கிறோம். அம்மா காசு கொடுங்கஅல்லாஹ் உங்களுக்கு கிருபை செய்வான் என்று ஒரு யாசகன் கேட்பான் என்றால் எழுந்து சென்று விடுவோம்.
ஐந்தாவது அவர் இறந்து போய்விட்டால் ஜனாஸா தொழுவது பிறகு அவருக்கு நன்மையை சேர்ப்பிக்கிற காரியங்களை செய்வது,
ஆறாவது அவர் தனது பேச்சில் அல்லது நடை முறையில் ஏதாவது சிரமங்கள் கொடுத்தால் அதைப் பொருத்துக் கொள்வதும் அவருடைய மன்னிப்பை பெற்றுத்தரும். அத்தகைய சந்தர்ப்பங்களில் நம்மால் அவரும் துன்பம் அனுபவித்திருப்பார் அல்லவா என்று எண்ணிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நான் திருந்தலாம்னு நினைக்கிறேன். அவன் மேலும் மேலும் துன்புறுத்திக் கொண்டிருக்கிறான் என்று கோபப் படுவது நமது கிரைம் ரேட்டை அதிகப் படுத்தி விடும்.

நாம் அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பு கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவது போல மற்ற மக்களிடமிருந்தும் மன்னிப்பு கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்.

தவறுகள் சகஜம் தான். அதில் திருத்தம் செய்வது விடும் போது தான் நமது வாழ்க்கை சீர் பெரும்.,

அல்லாஹ்வின் எச்சரிக்கையை நாம் மறந்து விடக் கூடாது.

وَلاَ تَحْسَبَنَّ اللّهَ غَافِلاً عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الأَبْصَارُ {إبراهيم:42
وَلَوْ يُؤَاخِذُ اللَّهُ النَّاسَ بِمَا كَسَبُوا مَا تَرَكَ عَلَى ظَهْرِهَا مِن دَابَّةٍ وَلَكِن يُؤَخِّرُهُمْ إِلَى أَجَلٍ مُّسَمًّى {فاطر:45}
சீக்கிரமே ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சீர்திருத்தப் பட வேண்டிய அம்சங்களை நாம் சீர்திருத்தி விட வேண்டும்.
அல்லாஹ் கிருபை செய்வானாக!



No comments:

Post a Comment