வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 11, 2018

ஒப்பந்தங்கள் எப்போது தீர்வுக்கான வழியாகும் ?

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ

போக்குவரத்து தொழிலாளர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை அரசு சரிவர மதிக்கவில்லை. அல்லது புதிய ஒப்பந்தங்களை சரியாக செய்து கொள்ள வில்லை என்பது தமிழக மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கிற பெரும் பிரச்சனையாக உருவெடுத்து ஒரு வார காலம் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி விட்டது.

நேற்றிரவு மேற்கொண்ட ஒரு ஒப்பந்தத்தின் மூலம் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப் பட்டிருக்கிறது.

ஒரு ஒப்பந்தம் பெரும் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. ஆனால் இந்த ஒப்பந்தம் இனி ஒரு போராட்டத்திற்கு வழி வகுக்காது என்று கூற முடியாது.

ஏனெனில் இரண்டு தரப்பும் ஒப்பந்தம் விசயத்தில் நீதியாக இருப்பதில்லை.

ஒப்பந்தங்கள் மீறப்படும் போது பெரும் குழப்பங்கள் நிகழும் என திருக்குர் ஆன் எச்சரிக்கிறது.  

அல்மாயிதா அத்தியாயம் வாழ்வியல் சட்டங்கள் நிறைந்த அத்தியாயம்.

அது உடன்படிக்கைகளை பரிபூரணமாக நிறைவேற்றுங்கள் என்று தொடங்குகிறது.

வெறுமனே நிறைவேற்றுவது அல்ல. பரிபூரணமாக நிறைவேற்றுதல்

الْوَفَاءُ  وَالْإِيفَاءُ : هُوَ الْإِتْيَانُ بِالشَّيْءِ وَافِيًا تَامًّا لَا نَقْصَ فِيهِ وَأَوْفُوا الْكَيْلَ إِذَا كِلْتُمْ (17 : 35)

ஒருவரோடு ஒரு காரியத்தை நிறைவேற்றித் தருவதாக  -ஒப்பந்தம் செய்திருந்தால் அதை பரிபூரணமாக நிறைவேற்றுவதற்கு மூஃமின்கள் முயற்சி செய்ய வேண்டும்.
இந்த உத்தரவை தொடங்குவதற்கு முன் முஃமின்களே என்று அல்லாஹ் மக்களை அழைத்க்கிறான். அதன்பிறகு சொல்லப் படுகிற சட்டங்களுக்கு கட்டுப்படுவது ஈமானிய இயல்பாக கருதப் படும், .
எனவே ஒப்பந்தங்களை பரிபூரணமாக நிறைவேற்றுவது ஈனாமிய இயல்பாகும்.
ஒரு வேலைக்கு ஒரு தொழிலாளி நியமிக்கப் படுகிற போது இருவரும் பரஸ்பரம் அடுத்தவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றி ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள் என்றே பொருள்
எனவே ஒரு முஸ்லிம் தொழிலாளி தனது ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்ற நினைக்க வேண்டும். அதே போல முதலாளியும் தொழிலாளிக்கான உரிமையை முழுமையாக செய்து தர நினைக்க வேண்டும்.
யாரும் மற்றவருடைய இயலாமையை காரணாமாக்கி ஒப்பந்தம் செய்யப் பட்ட காரியங்களில் குறைவை ஏற்படுத்தக் கூடாது.
முதலாளிக்கு தெரியாது – அல்லது அவரால் என்ன செய்ய முடியும் என்ற எண்ணத்தில் தொழிலாளியும் அதே போல முதலாளியும் நினைத்து ஒப்பந்த நிபந்தனைகளை மீறக் கூடாது.

ஒப்பந்தங்களில் மிகச் சிற்ப்பான வெற்றி இருக்கிறது

வாழ்க்கையில் பிரச்சனைகளை பெரிது கொண்டிருப்பதை விட ஒப்பந்தங்களில் வழி தீர்வுகளை தேட வேண்டும்

பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ஹுதைபிய்யா ஒப்பந்தம் மிகப் பெரும் வெற்றிக்கு காரணமானது
.
மக்காவின் காபிர்களோடு முஹம்மது நபிக்கு நல்லுறவு ஏற்ப்பட்டு விட்டது என்ற செய்தி இதன் மூலம் அரபு தேசத்திலும் மற்ற நாடுகளிலும் பரவியது. ‘
அது வரை மக்காவின் காபிர்களை பயந்து இஸ்லாமை ஏற்றுக் கொள்ள தயங்கிக் கொண்டிருந்த பலர் இஸ்லாமை தழுவினர்.

அபூமூஸல் அஷ் அரீ ரலி அவர்கள் இஸ்லாமைத் தழுவிய வரலாற்றைப் படித்துப்பாருங்கள் இந்த உண்மை தெளிவாக புரியும்.

இஸ்லாமிய பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து அதுவரை எவ்வளவு பேர் இஸ்லாமைத் தழுவியிருந்தார்களோ அதை விட இரண்டு மடங்கு மக்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இஸ்லாமைத் தழுவினார்கள்.

இதையே பெரும் வெற்றி என பெருமானாருக்கு அல்லாஹ் கூறினான்.

சூரத்துல் பதஹ் அத்தியாயம் முழுவதும் ஹுதைபிய்யாவிலிருந்து திரும்புகிற வழியில் இறங்கியது.

ஒப்பந்தங்கள் செய்து கொள்ளும். போன்ற சந்தர்ப்பங்களில்
·         சில விவகாரங்களை விட்டுக் கொடுக்க முன் வர வேண்டும். (ஹுதைபிய்யாவில் உம்ரா செய்யும் உரிமையை பெருமானார் (ஸல்) அவர்கள் விட்டுக் கொடுத்தது போல.
·         சில விவகாரங்களை சகித்துக் கொள்ள வேண்டும். ஹுதைபிய்யாவில் மக்கா வாசிகளின் கோரிக்கையை ஏற்றது போல )

குடும்பம். தொழில், பொது விவகாரம் அனைத்திற்கும் இது பொருந்தும்

நிறைவேற்றும் சிந்தனை

எந்த ஒப்பந்தமாகட்டும். அதை நிறைவேற்ற நினைக்க வேண்டும். நிறைவேற்ற முயற்சிக்க  வேண்டும். அப்போதுதான் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும்.  வெற்றி நிச்சயமாகும்.

 إِنَّ اللَّهَ مَعَ الَّذِينَ اتَّقَوْا وَالَّذِينَ هُمْ مُحْسِنُونَ {النحل:128}.
ஒப்பந்தத்தங்களை நிறைவேற்ற வேண்டும் ஏன் ?
·         ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது என்பது ஒரு முஸ்லிம் அவரது தோளில் சுமந்து கொண்டிருக்கிற சுமமையாகும். அது இறைவன் மனிதர்களுக்கு கற்பித்த நல்லொழுக்கமாகும்.
وأوفوا بالعهد إن العهد كان مسئولا) (الإسراء: 34).
·         ஒரு மனிதர் உண்மையானவர் என்பத முதல் அடையாளமுமாகும்
·         மக்களுக்கிடையே அழுத்தமான நம்பிக்கையை ஏற்படும் . சமூக உறவுகள் வலுப்படும்.

·         பேருந்துகளில் பஸ் டிக்கட் புக் செய்கிறோம். பேருந்துகள் சரியாக இயங்காது என்றால் நிலமை என்னவாகும் யோசித்துப் பாருங்கள். வங்கிகள் பணம் தராது என்றால் நிலைமை என்னவாகும் ? நாம் சொன்ன மாதிரி டைலர் தைத்து தர மாட்டேன் என்றால் ? வண்டி சர்வீஸ் சைது தருகிறவன் பிரேக் ஒயரை கவனிக்க மாட்டான் என்றால் ?
எனவே ஒரு சமூக கட்டமைப்பே உடன்படிக்கைகளை நடைமுறைப் படுத்துவதில் தான் அடங்கியிருக்கிறது.

·         அது சாலிஹானவர்களின் நடை முறையுமாகும்.
 والموفون بعهدهم إذا عاهدوا " [ البقرة
واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا " [ مريم
·         அது பெருமானாரின் இயல்பாகும்
ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி) அவர்கள் பெருமானாரை அடையாளப் படுத்தும் வார்த்தை ஒப்பந்தததை நிறைவேற்றுபவர்
رسولَ الله شِيمتُه الوفاءُ 
அது பெருமானாரின் அடிப்படை போதனைகளில் ஒன்றுமாகும்.
قال ابن عباس - رضي الله عنهما -: أخبرَني أبو سفيان أن هِرقلَ قال له: سألتُك ماذا يأمركم؟ قال أبو سفيان  أنه يأمر بالصلاة والصِّدق، والعفاف والوفاء بالعهد، قال هرقل: وهذه صفة النبي ...

சிரமான நேரத்திலும் ஒப்பந்தங்களை நிறைவேற்ற பெருமானார் முக்கியத்துவம் அளித்தார்கள். அதில் சமரம் செய்து கொள்ள முயலவில்லை
பத்று.யுத்தத்தின் காலகட்டத்தில் ஹுதைபா ரலி அவர்கள் இஸ்லாமை தழுவ மதீனா வை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.  அவரையும் அவரது சிறிய தந்தையையும் மடக்கிப் பிடித்த காபிர்கள் முஹம்மதுக்கு உதவுமாட்டோம் என அவர்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டனர்.
நபித்தோழர்கள் மிக குறைந்த எண்ணிக்கையில் இருந்த நிலையில் – பெருமானார் (ஸல்) அவர்கள் ஒப்பந்தத்தை மீற அனுமதிக்க வில்லை.
அந்த ஒப்பந்தம் அநீதியாக செய்யப் பட்டிருந்த நிலையிலும் கூட,.
حذيفةُ بن اليَمان - رضي الله عنه - قال: ما منَعني أن أشهد بدرًا، إلا أني خرجت أنا وأبي حُسيلٌ، قال: فأخَذَنا كفار قريش، قالوا: إنكم تريدون محمدًا، فقلنا: ما نريده، ما نريد إلا المدينة، فأخَذوا منا عهدَ الله وميثاقه، لنَنصَرِفَنَّ إلى المدينة ولا نُقاتل معه، فأتينا رسول الله - صلى الله عليه وسلم - فأخبرْناه الخبر، فقال: ((انصَرفا، نَفي لهم بعهْدهم، ونستعين الله عليهم))

ஒப்பந்தத்தை பராமரிப்பதில் காட்ட வேண்டிய அக்கறை எந்த அளவுக்கு இருக்க வேண்டும் ?
பெருமானார் கூறினார்கள். ஒரு முடிச்சை அவிழ்க்கவும் வேண்டம் இறுக்கி கட்டவும் வேண்டாம்
وقال النبي صلى الله عليه وسلم: "من كان بينه وبين قوم عهد؛ فلا يحلن عقدة ولا يشدها حتى يمضي أمده، أو ينبذ اليهم على سواء" (رواه أبو داود والترمذي).
.
ஒப்பந்தம் பேசத் தொடங்கியதிலிருந்தே ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டார்கள் நபிகள் நாயகம் (ஸல்)
ஹுதைபிய்யா ஒபந்த காலத்தில் பெருமானாரோடு பேச்சுக்கு வந்த சுஹைல் பின் அம்ரு ரலி (அப்போது அவர் காபிர்களின் அணியில் இருந்தார்) முஸ்லிமாகி விட்ட தனது மகன் அபூஜன் தலை சங்கிலியால் கட்டி வீட்டின் உள் அறையில் வைத்து சித்ரவதை செய்து கொண்டிருந்தார். எப்படியோ அங்கிருந்து தப்பி அபூஜன் தல் ஹுதைபிய்யா ஒப்பந்தம் கையெழுத்தாகிற சந்தர்ப்பத்தில் பெருமானாருக்கு முன்னாள் வந்து விழுந்தார். என்னைக் காப்பாற்றுங்கள் என்றார். சுஹைல் மகனை திருப்பித் தரக் கோரினார் . இது உடன்படிக்கையை மீறீய முதல் நிகழ்வு என சாதுர்யமாக வாதிட்டார். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அவரது மகனை அவரிடமே ஒப்படைத்தார்கள்
وفي ذلك الصلح الذي ابرمه النبي صلى الله عليه وسلم مع مندوب قريش سهيل بن عمرو، وكان من بنود هذا الصلح ان اي رجل يأتي الى النبي صلى الله عليه وسلم من قريش خلال مدة هذا الصلح يرده اليهم وإن كان مسلماً، وبينما هم بصدد كتابة بقية بنود هذا الصلح اذ جاء ابو جندل بن سهيل بن عمرو يرسف في قيوده، قد خرج من اسفل مكة حتى رمى بنفسه بين ظهور المسلمين. فقال سهيل: هذا يا محمد أول ما اقاضيك عليه ان ترده الي. فقال النبي صلى الله عليه وسلم: "إنا لم نقض الكتاب بعد" فقال: اذا لا اصالحك على شيء ابدا. فقال النبي صلى الله عليه وسلم: "فأجزه لي" قال: ما انا بمجيزه لك. قال النبي صلى الله عليه وسلم: "بلى فافعل" قال: ما انا بفاعل. فجعل ابو جندل يصرخ بأعلى صوته: يا معشر المسلمين! أأرد الى المشركين يفتنوني في ديني وقد جئت مسلماً؟ فقال له رسول الله صلى الله عليه وسلم: "يا أبا جندل! اصبر واحتسب، فإن الله جاعل لك ولمن معك من المستضعفين فرجاً ومخرجاً، إنا قد عقدنا بيننا وبين القو م صلحاً، وأعطيناهم على ذلك، وأعطونا عهد الله، فلا نغدر بهم" (رواه البخاري)، 

ஹுதை பிய்யா உடன்படிக்கையின் போது அந்த வரும் உமரா செய்யாமல் திரும்பி விட வேண்டும் என்று கூறிய மக்காவின் காபிர்கள் அதற்கடுத்த வருடம் உம்ரா செய்ய வருமாறு கூறினார். அப்படி முஸ்லிம்கள் உம்ரா செய்ய வரும் போது மூன்று நாட்கள் ஹரம் பிராந்தியத்தை தாங்கள் காலி செய்து தருவதாக கூறினர். அதே போல ஹிஜ்ரீ 7 ம் ஆண்டு உம்ரா செய்ய பெருமானார் (ஸல்) அவர்கள் வந்தார்கள். மூன்று நாள் கழிந்ததது, காலி செய்ய கோரினர் . பெருமானார் (ஸல்) அவர்கள் மறுவார்த்தை பேசாமல் மக்காவை காலி செய்து கொடுத்தார்கள்.

فلما دخل ومضت الأيام أتوا عليا فقالوا: مر صاحبك فليرحل، فذكر ذلك علي لرسول الله صلى الله عليه وسلم فقال: "نعم" فارتحل (متفق عليه).
முஸ்லிமல்லாதவர்களுக்கு செய்து கொடுத்த உடன்படிக்கையையும் நிறைவேற்ற் வேண்டும்.
وقال صلى الله عليه وسلم محذراً من الغدر وعدم الوفاء بالوعد: "من أمن رجلاً على نفسه فقتله، فأنا بريء من القاتل، وإن كان المقتول كافراً" (رواه النسائي وصححه الألباني)


சமூகம் தொடர்பான காரியங்களில் மட்டுமல்ல குடும்ப விவகாரங்களிலும் ஒப்பந்தங்களை பராமரிக்க வேண்டும்

திருமணம் ஒரு ஒப்பந்தம் .
நல்ல முறையில் சேர்ந்து வாழ்தல் . அல்லது கருணையோடு பிரிந்து விடுதல் என்ற  நியதியின் பேரிலான ஒப்பந்தம் .

பரஸ்பரம் அன்பின் அடிப்படையிலான அந்த ஒப்பந்தத்திற்கு கணவன் மனைவி இருவரும் முழு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பெருமானார் ஸல்) அவர்கள்  தனது மனைவி கதீஜா அம்மாவின் மீதான தூய அன்பிற்கு கொடுத்த முக்கியத்துவம் மற்ற மனைவியரை ரோஷமடையச் செய்யும் அளவு இருநதது.

فعن أنس بن مالك رضي الله عنه قال: كان النبي صلى الله عليه وسلم إذا أتي بالشيء يقول((اذهبوا به إلى فلانة؛ فإنها كانت صديقة خديجة، اذهبوا به إلى بيت فلانة؛ فإنها كانت تحب خديجة))

وعن عائشة رضي الله عنها قالت((ما غرت على أحد من أزواج النبي صلى الله عليه وسلم ما غرت على خديجة، وما بي أن أكون أدركتها؛ وما ذاك إلا لكثرة ذكر رسول الله صلى الله عليه وسلم، وإن كان ليذبح الشاة فيتتبع بها صدائق خديجة؛ فيهديها لهنَّ)


ஒப்பந்தங்கள் நல்லது. ஆனால் அது சரியாக பராமரிக்கப் படாவிட்டால், ஒப்பந்தங்கள் மிறப்படும் போது பெரும் ஆபத்துக்கள் நிகழும்

وقال صلى الله عليه وسلم: "ما نقض قوم العهد الا كان القتل بينهم" (رواه الحاكم وصححه على شرط مسلم

ஒப்பந்தங்களை மீறுவது மனித மரியாதைக்கும் மிகவும் இழிவை தரக்கூடியது எனவே பெருமானார் (ஸல்) அவர்கள் இத்தீய குணத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்பவ்ராக இருந்தார்கள்.

وأعوذ بك من الخيانة فإنها بئست البطانة" (رواه ابو داود والنسائي

ஒப்பந்தங்களை மீறுவதை பெருமானார் (ஸல்) அவர்கள் கடுமையாக கண்டித்தார்கள்.

فقال النبي صلى الله عليه وسلم: "لكل غادر لواء يوم القيامة يعرف به" (متفق عليه).

தான் ஒப்பந்தங்களை மீறுவதில்லை என்பதை பகிரங்கப் படுத்தினார்கள்

فقال عليه الصلاة والسلام: "إني لا اخيس بالعهد" (رواه أحمد وأبو داود 

இந்த வார்த்தையை பெருமானார் (ஸல்) அவர்கள் எப்போது சொன்னார்கள் என்பது பற்றி வரலாறு இப்படி கூறுகிறது.

மக்கா காபிர்களின் தரப்பிலிருந்து அபூராபிஃ என்பவர் ஒரு முறை தூதராக வந்தார். வந்தவர் மதீனாவிலேயே தங்கிக் கொள்ள விரும்பினார். பெருமானாரிடம் அதற்கு அனுமதி கோரினார். அப்போது பெருமானார் (ஸல்) அவர்கள் நான் உடன்படிக்கைகளை மீறுவதில்லை என்றார்கள்.

இன்றைய நம்முடைய வாழ்வில் ஒப்பந்தங்கள் என்ன அந்தஸ்து வகிக்கின்றன.

இன்று நாம் பலருடன் பல விசயத்திற்காக உடன்படிக்கைகளில் கையெழுத்திடுகிறோம்.

அவை நமக்கு ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை.
அல்லாஹ் காப்பாற்றுவானாக!

குறிப்பாக கடன் வாங்குகிற போது திருப்பி தரும் ஒப்பந்தங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது சரியல்ல

வாகனங்களை / தொலைபேசியை/ அல்லது வீட்டு உபயோகப் பொருட்களை  கடனுக்கு வாங்கி விட்டு தவனை செலுத்தாமல் இருப்பது ஒப்பந்த மீறுதலே . அது  தனி நபரின் மரியாதையை மட்டுமல்ல. ஒட்ட மொத்த சமூகத்தையே பாதித்து விடுகிறது. ஒப்பந்த மீறுதல்கள் கொலை வரை கொண்டு சேர்த்து விடும் என்ற பெருமானாரின் வார்த்தைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடன் குறித்து பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்ன விசயங்களையும் கவனிக்க வேண்டும்.
نفس المؤمن معلقة بدينه حتى يقضى عنه

அதே போல குடும்ப விவகாரங்கள்/ தொழிலாளர்கள் / தொழில் தொடர்புகள். செய்யப்படுகிற 
சத்தியங்களும் வாக்குறுதிகளும் கூட உடன்படிக்கையின் அம்சங்கள் தான் ,
அவைகளையும் நிறைவேற்றுவதில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். அலட்சியமாக விடக் கூடாது.

இவற்றில் காட்டப்படும் எந்த அலட்சியமும். தனி மனித வாழ்விலும் சமூகத்திலும் பிரச்சனைகளை உருவாக்கும்.

முஃமின்ககள் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா ?

ஒப்பந்தங்களை சராசரியாக நிறைவேற்றுகிறவர்களாக அல்ல. ஒப்பந்தங்களை
பரிபூரணமாக நிறைவேற்றுகிறவர்களாக இருக்க வேண்டும்.

தனது ஓப்பந்தங்களை பரிபூரணமாக நிறைவேற்றுகிற இயல்பு பெருமானாரிடம் எந்தச் சந்தர்ப்பத்திலும் இருந்தது. சாக்குப் போக்குகள் சொல்லி ஒரு போதும் ஒப்பந்தங்களை நீர்த்துப் போகச் செய்யக் கூடியவராக பெருமானார் (ஸல்) அவர்கள் இருக்கவில்லை.

பெருமானார் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்யும் வழியில் சுராக்கா அவரை பிந்தொடர்ந்தார். அவருடை ஒட்டகத்தின் கால்களை பூமி பிடித்திழுத்துக் கொண்டது. அப்போது பெருமானாரின் துஆவால் மீண்ட அவர் தனது பெருமானார் (ஸல் அவர்களின் ஒரு காலத்தில் பெருமானாரின் கை ஓங்கி நிற்கும் என்பதை அறிந்து கொண்டார். எனவே சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொள்ள நினைத்தார். தனக்கு ஒரு பாதுகாப்பு உறுதி மொழி எழுதித் தர வேண்டும் என்று கூறினார். அந்த நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் ஒரு தோல் துண்டில் பெருமானார் (ஸல்) அவர்கள அவருக்கு உறுதி மொழி எழுதிக் கொடுத்தார்கள் .

சுராக்காவே அந்த நிக்ழவை கூறுகிறார், புகாரியின் நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி

أتيت فرسي فركبتها فرفعتها تقرب بي حتى دنوت منهم فعثرت بي فرسي فخررت عنها، فقمت فأهويت يدي إلى كنانتي فاستخرجت منها الأزلام فاستقسمت بها، أضرهم أم لا، فخرج الذي أكره، فركبت فرسي، وعصيت الأزلام؛ تُقَرّب بي، حتى إذا سمعت قراءة رسول الله   وهو لا يلتفت، وأبو بكر يكثر الالتفات، ساخت يدا فرسي في الأرض، حتى بلغتا الركبتين، فخررت عنها، ثم زجرتها فنهضتْ فلم تكد تخرج يديها، فلما استوت قائمة إذا لأثر يديها عثان ساطع في السماء مثل الدخان، فاستقسمت بالأزلام فخرج الذي أكره، فناديتهم بالأمان فوقفوا فركبت فرسي حتى جئتهم ووقع في نفسي حين لقيت ما لقيت من الحبس عنهم، أن سيظهر أمر رسول الله  فقلت له: إن قومك قد جعلوا فيك الدية، وأخبرتهم أخبار ما يريد الناس بهم، وعرضت عليهم الزاد والمتاع فلم يرزآني. ولم يسألاني، إلا أن قال: أخف عنا، فسألته أن يكتب لي في كتاب آمن، فأمر عامر بن فهيرة فكتب في رقعة من أديم ثم مضى رسول الله .

சுராக்கா (ரலி) நீண்ட காலம் இஸ்லாமை தழுவ வில்லை. ஆனால் இஸ்லாத்திற்கோ முஸ்லிம்களுக்கோ அவர் தீங்கிழைக்கவும் இல்லை.

இஸ்லாம் பெரும் வெற்றி களை கண்ட பிறகு பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவையும் ஹவாஸின்களையும் (ஹுனைன் யுத்தம் ) வெற்றி கொண்டு பெரும் செல்வந்தராக பேரரசாக உயர்ந்திருந்த நிலையில் பெருமானாரைத் தேடி வந்தார். அந்தக் கடிதத்தை நீட்டினார். பெருமானார் (ஸல்) அவருக்கு அபயம் கொடுத்தார்கள்

يقول سراقة عن إسلامه: حتى إِذا فتح اللّه على رسوله مكة، وفرغ من حنين والطائف، خرجت، ومعي الكتاب لأَلقاه، فلقيته بالجِعِرَّانة، فدخلت في كتيبة من خيل الأَنصار، فجعلوا يقرعونني بالرماح ويقولون: إِليك إِليك، ماذا تريد؟ حتى دَنَوتُ من رسول الله Mohamed peace be upon him.svg، وهو على ناقته، واللّه لكأَني أَنظر إِلى ساقه، في غَرْزِه كأَنه جُمَّارة، فرفعت يدي بالكتاب، ثم قلت: يا رسول الله Mohamed peace be upon him.svg، هذا كتابك لي، وأَنا سراقة بن مالك بن جُعْشم، فقال رسول الله Mohamed peace be upon him.svg:هَذَا يَوْمُ وَفَاءٍ وَبِرٍّ، أَدْنِهِ فدنوت منه، فأَسلمت.
 
அவர் பெருமானாரை துரத்திச் சென்ற சமயத்தில் வாய் வழி ஆறுதலாக ஒரு வாசகம் சொன்னார்கள். அதுவும் ஒரு ஒப்பந்தம் போலவே பிற்காலத்தில் நிறைவேறிய அதிசமய் நடந்தது.

قال النبي محمد صلى الله عليه وسلم لسراقة بن مالك حين لحق به في هجرة النبي من مكة إلى المدينة
كيف بك إِذا لبست سِوَارَيْ كسرى ومِنْطَقَتَه وتاجه
கிஸ்ராவின் மகுடத்தைய்ம் கை கடகங்களையும் நீ அணிந்தால் உனக்கு எப்படி இருக்கும். ?

அதுவும் நிறைவேறியது.

فلما فتح سعد بن أبي وقاص المدائن في زمن خلافة عمر بن الخطاب، أرسل سواري كسرى وتاجه ضمن الغنائم إلى الخليفة فتحقق لسراقة وعد النبي له حيث ألبسه عمر سواري كسرى.

இது வெறுமனே இரசிக்கத் தக்க வரலாறு மட்டுமல்ல. ஒப்பந்தங்களும் அதை நிறைவேற்றப் படுகிற அழகும். ஒரு தனி மனித வாழ்வை எவ்வளவு சிறப்படையச் செய்கின்றத், வெற்றியை தருகிறது என்பதை தாண்டி ஒப்பந்தங்களை நிறைவேற்றுகிற சிந்தனை நம்மிடம் இருக்குமானால் நமது வார்த்தைகளை வெற்றி பெற்ச் செய்ய அல்லாஹ்வின் உதவி எப்படி வந்து சேருகிறது என்பதற்கான மகத்தான அடையாளமாக இருக்கிறது.

2018 ம் ஆண்டின் தொடக்கத்தில் போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனையில் அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் ஒரு சிரமத்திற்கு தீர்வை தந்திருக்கிறது.

நாமும் ஒப்பந்தங்களின் படி வாழ்வோம் என ஒரு உறுதி மொழியை எடுத்துக் கொள்வோம் எனில்


நிச்சயமாக அல்லாஹ் நமக்கு துணை நிற்பான்.  

1 comment: