வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 14, 2016

இறைநேசர்களின் தலைவர்

الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب

رواه البخاري عن أبي هريرة قال : قال رسول الله - صلى الله تعالى عليه وسلم - : " من عادى لي وليا فقد آذنته بالحرب " . قال شارح له : أي أعلمته بمحاربته ومعاداته معي ، أو بأني سأحاربه ، وأقهره ، وأنتصر منه ، وأنتقم له .

وعن عمر بن الخطاب - رضي الله عنه - أنه خرج يوما إلى مسجد رسول الله - صلى الله عليه وسلم –
فوجد معاذ بن جبل قاعدا عند قبر النبي - صلى الله عليه وسلم - يبكي ، فقال : ما يبكيك ؟ قال : يبكيني شيء سمعته من رسول الله - صلى الله عليه وسلم - ، سمعت رسول الله - صلى الله عليه وسلم - يقول : إن يسير الرياء شرك ، ومن عادى لله وليا فقد بارز الله بالمحاربة ، إن الله يحب الأبرار الأتقياء الأخفياء الذين إذا غابوا لم يتفقدوا ، وإن حضروا لم يدعوا ولم يقربوا ، قلوبهم مصابيح الهدى ، يخرجون من كل غبراء مظلمة " . رواه ابن ماجه ، والبيهقي في ( شعب الإيمان

இறைநேசர்கள் என்போர் அல்லாஹ்வைப் பற்றியை சிந்தனை ஒன்றை மட்டுமே இந்த உலகில் குறிக்கோளாக கொண்டு வாந்தோர் ஆவர்.
அப்படி வாழும் ஒரு வாழ்க்கைக்கு மக்களைப் பழக்கப்படுத்தியவர்களும் ஆவர்.
அதே போல சத்திய இஸ்லாத்தைப் பரப்பும் தீன் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்களும் ஆவர். அதற்காக தமது நாடு மக்கள் அனைவரையும் துரந்து வந்தவர்கள் ஆவர்.
உலகம் முழுவதிலும் இறைநேசர்கள் என்று அறியப்படுவோரிடம் இத்தகைய இயல்பு இருந்ததை அவர்களது வரலாற்றை ஒரு முறையேனும் வாசித்துப் பார்த்தால் அறிந்து கொள்ளலாம்.
ஏர்வாடி இபுறாகீம் ஷஹீது வலியுல்லாஹ் மொரோக்கோவிலிருந்து மார்க்கப் பிரச்சாரத்திற்காக இந்தியா வந்தவர் ஆவார். நாகூர் ஷாகுல் ஹமீது நாயகம் அவர்கள் மாணிக்கபூரிலிருந்து மார்க்கப் பிரச்சாரத்திற்கு வந்தவர் ஆவார், திருச்சி நத்ஹர் ஷா வலியுல்லாஹ் அவர்களும் அரபு தேசத்திலிருந்து மார்க்கப் பிரச்சாரத்திற்கு வந்தவர்களே, இவர்களால் ஏற்பட்ட மறுமலர்ச்சி தான் இன்று தென்னாட்டில் முஸ்லிம்கள் கனிசமாக இருப்பதற்கு காரணமாகும்.
இயக்கங்களின் பெயரில் பாம்லெட் விநியோகித்துக் கொண்டு அமைப்புக்கள் தமது தஃவா வின் விளம்பரங்களுக்கு முன்னால் இந்தப் பெருமக்களின் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அழுத்தமான இறையச்சமும் தூய இஸ்லாமிய வாழ்வும் பிரச்சாரமுமே இறைநேசர்களின் அடையாளமாகும்
இதுவே அவர்களை நாம் நேசிக்க காரணமும் ஆகும்,

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி – உலக முஸ்லிம்களின் தனித்த மரியாதையை பெற்ற இறைநேசர் ஆவார்,
ஈரானில் பிறந்து பஃதாதில் மறைந்த அந்தப் பெருந்தகையை உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் நேசிக்கிறார்கள்.
கொளதுல் அஃலம் என்று அழைக்கப்படுகிறார்கள், கெளது என்பது இறைநேசர்களின் ஒரு உயர்ந்த தரமாகும். இத் தரத்திலுள்ளவர்கள் ஒரு சாமானிய மனிதரை இறைநேசராக மாற்ற முடியும் சிறப்புப் பெற்றவராக இருப்பார்.
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் தமது காலத்தில் ஏராளமானோர் இறை அருளை பெற்றவர்களாக ஆக உதவியவர் ஆவார். பஃதாது நகரம் இஸ்லாமிய உலகின் தலைநகராக நீண்ட காலம் இருந்ததால் உலக முஸ்லிம்களுக்கு பஃதாதுடன் தொடர்பு இருந்தது, அங்கு மகத்தான சேவை செய்த ஜீலானி ரஹ் அவர்களின் சன்மார்க்க சீர்திருத்தப் பணியின் பலனை உலகளாவிய முஸ்லி சமுதாயம் அடைந்தது, அவரது அறிவாற்றலால் முஸ்லிம் உலகு பெரும் நன்மை அடைந்தது,  
இதனாலேயே உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஜீலானி ரஹ் அவர்களை நினைவு கூறுகிறார்கள். அவரின் பெயரால் பள்ளிவாசல்கள் மதரஸாக்கள் நடத்துகிறார்கள், பல நற்காரியங்களை செய்கிறார்கள்
அவர் ஹிஜ்ரி 470 ல் பிறந்தார் 561ல் மறைந்தார்.
இந்த காலகட்டத்தில் தான் ஜெரூசலத்தை மீட்டுக் கொடுத்த சலாஹுத்தீன் அய்யூபி வாழ்ந்தார்கள். (532 – 589)           
ஆனால் ஜீலானி ரஹ் அவர்களின் காலம் ஜெரூசலம் ஐரோப்பிய கிருத்துவர்களிடம் அடிமைப் பட்டு கீர்த்தி மிக்க இஸ்லாமிய உலகு குழப்பத்திற்குள்ளாகி யிருந்த காலகட்டமாகும்.
ஜீலானி ரஹ் அவர்கள் மறைந்து 20 வருடங்களுக்குப் பிறகு தான் ஹிஜ்ரி 581 ல் மிஃராஜுடைய நாளில் சலாஹுத்தீன் அய்யூபி பைத்துல் முகத்தஸைக் கைப்பற்றினார்.
அரசியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் வளர்ந்து பின் ஒரு குழப்பத்திற்கு முஸ்லிம் உலகு ஆட்பட்டிருந்த சூழ்நிலையில் தான் ஜீலானி ரஹ் பிறந்தார்கள்.
அவரது தந்தை அபூசாலிஹ் உலக வாழ்க்கையின் மீது பற்றற்றரவ்ராக இருந்தார். அவரது வமிசத்தொடர் ஹஸன் ரலி அவர்களில் சென்று முடிகிறது.
தாய் நாடான ஈரானில் உள்ள ஜீலானில் ஆரம்ப கல்வியைக் கற்ற பின் 18 வயதில் அப்பாஸிய கலீபா முஸ்தழ்ஹிர் பில்லாவின் ஆட்சிக் காலத்தில் பக்தாதிற்கு  வந்தார்.  
அங்கிருந்த அஷ்ஷைகு அபூஸஈதில் மக்ரமீ அவர்களுடைய மதரஸாவில் சேர்ந்து கல்வி பயின்றார். அந்த் இடம் இப்போது பாபுஷ் ஷைகு என்று அழைக்கப்படுகிறது.
இந்த கால கட்டத்தில் கல்வி அறிவில் முன்னேறியிருந்த முஸ்லிம்கள் பக்தாதில் தான் தோற்றித்தனமாக போக்கில் சென்று கொண்டிருந்தனர்,
அவர்களை சீர்திருத்தும் ஒரு தலைமை இல்லாமல் இருந்தது, அரசியல் பெரும் தடுமாற்றத்தில் இருந்தது,  பாலஸ்தீனின் பைத்துல் முகத்தஸ் துருக்கியின் அந்தாக்கிய்யா போன்ற பல நகரங்களை ஐரோப்பிய சிலுவையுத்தக் காரர்கள் கைப்பற்றியிருந்தனர்.
முஸ்லிம்களின் மைய அரசு வலிமையற்று இருந்ததால் முஸ்லிம் நகரங்களில் அரசர்களும் வாரத்திற்கு வாரம் மாறிக் கொண்டிருந்தார்கள்.
கலீபாவுக்கு எதிராக துருக்கிய மன்னர் கொடிபிடித்தார். அவரை அடக்க மன்னர் துருக்கியர்களில் மற்றொரு பிரிவினரான் சல்ஜூக்கியர்களில் உதவியை அரசர் நாடினார்,
ஜும் ஆவில் அரசர்களின் பெயர்கள் வாரத்திற்கு வாரம் மாறிக் கொண்டிருந்ததாக வரலாறு சொல்கிறது.
அரசியல் குழப்பத்திறு நடுவே மத ரீதியாக ஷியாக்களின் குழப்பமும் பக்தாதில் அதிகரித்திருந்தது, இதை சல்ஜூக் மன்னர் கட்டுப்படுத்தியிருந்தார்/
இந்தச் சூழலில் சுமார் முப்பது ஆண்டுகள் பக்தாதின் மதரஸாவில்  ஜீலானி ரஹ் மார்க்க கல்வியை கற்றுக் கொண்டிருந்தார். சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்தார்.

அங்கிருந்து 50 கீமி தொலைவிலுள்ள பகூபா நகருக்கு பயணம்.
محمد البعقوبي இடம் கிடைத்த சீடராக சேர்ந்தார்

அங்கே பல  விசயங்களை கற்றார், குறிப்பாக சத்தியப் பிரச்சாரம் செய்பவர்கள் யாரிடமும் எதையும் கேட்டுப் பெற மாட்டார்கள் என்ற பாடத்தைப் பெற்றார்.

பிறகு பக்தாதுக்கு மீண்டு வந்து அபூஸஈதில் மக்ரமீ உடைய மதரஸாவில் இணைந்தார். அவருடை ஷைகு ஜீலானி ரஹ் அவர்களின் சொல்லில் இருந்த வலிமையை அறிந்து மதரஸாவுக்கு முன்புறமாகவே ஒரு மேடை அமைத்துக் கொடுத்து அங்கிருந்து பயான் செய்யுமாறு கூறினார். கூறினார்.

ஆரம்பத்தில் அதை மறுத்த ஷைகு ஜீலானி ரஹ் அவர்கள் பின்னர் அவர்களுடைய கனவில் பெருமானார் (ஸல்) தோன்றி பயான் செய்யுமாறு கூறவே அங்கு பயான் செய்யத் தொடங்கினார்,

ஞாயிற்றுக் கிழமை வெள்ளிக் கிழமை செவ்வாய்க் கிழமை என வாரத்திற்கு 3 நாள் பயான் செய்யத்த் தொடங்கினார். 521 வருடம் பயான் தொடங்கியது, அந்த சொற்பொழிவுக்கு பெரும் மனிதரக்ள் தூரப் பகுதிகளில் இருந்தெல்லாம் வந்தார்கள்.

இன்று பயான் செய்வதற்காக அறிஞர்கள் உலகெங்கும் பயணம் செய்கிறார்கள், அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்களின் சொற்பொழுவை கேட்பதற்காக உலகமே பக்தாதுக்கு திரண்டது.

உணர்ச்சிமயமான அவரது சொற்பொழிவில் பலர் முஸ்லிம்களாயினர். ஏராளமானோ தம் தவற்றை உணர்ந்து திருந்தி நல்லவர்களானார்கள். ஒரு பெரிய மறுமலர்ச்சி மார்க்கப் புரட்சியும் ஏற்படலாயிற்று,

மக்கள் அவரது சொற்பொழிவை மெய் மறந்து கேட்டனர். அவரது தலைப்பாகை அவிழும் எனில் தமது தலைப்பாகையை அவிழ்த்துக் கொண்டனர். ஒவ்வொரு உரையின் போதும் மனமுருகி பலர் உயிர் துறந்தனர். பயானுக்குப் பின்னால் ஜனாஸாத் தொழுகைகள் நடத்தப்பட்டன.  

عقد الشيخ أبو سعيد المُخَرِمي لتلميذه عبد القادر مجالس الوعظ في مدرسته بباب الأزج في بداية 521 هـ، فصار يعظ فيها ثلاثة أيام من كل أسبوع، بكرة الأحد وبكرة الجمعة وعشية الثلاثاء.

حيث كان الوزراء والأمراء والأعيان يحضرون مجالسه، وكانت عامة الناس أشد تأثراً بوعظه، فقد تاب على يديه أكثر من مائة ألف من قطاع الطرق وأهل الشقاوة، وأسلم على يديه ما يزيد على خمسة الآف من اليهود والمسيحيين. وبحسب بعض المؤرخين

فانحلت طية من عمامته وهو لا يدري فألقى الحاضرون عمائهم وطواقيهم تقليداً له وهم لايشعرون.

அபுஸஈதில் மக்ரமீ வபாத்தான் பிறகு மதரஸாவின் பெறுப்பு ஜீலானி ரஹ் அவர்களிடம் தரப்பட்டது,
ஜீலானி ரஹ் அவர்கள் 13 கலைகளில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்கள்.  ஷாபி ஹன்பலி மத்ஹபின் படு பத்வாக்களை வழங்கினார், சில சந்தர்ப்பங்களில் ஹனபி மத்ஹபின் படியும் பத்வாக்களை வழங்கினார்.

இந்தக் காலகட்டத்தில் மதரஸாக்களில் பாலஸ்தீன மீட்பு ஒரு பிரச்சாரமாகவே செய்யப்பட்டது.

பெண்களும் இக்கால கட்டத்தில் சிறப்பாக மார்க்க கல்வியை கற்றனர். ஜீலானி ரஹ அவர்கள் தொடர்புடைய மதரஸாக்களில் சட்டம் வழங்கும் முப்தீ பட்டம் பெற்ற 800 பெண்கள் சலாஹுத்தீன் அய்யூபியின் காலத்தில் அரசிதழில் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.

ஜீலானி ரஹ் அவர்களிடம் தான் தோன்றிகளாக போய்க் கொண்டிருந்த மக்களின் அல்லாஹ்வின் பாதைக்கு திருப்பி விட வேண்டிய கடமை இருந்தது, அதை அற்புதமாக செய்தார்கள்,
தனது உரையிலேயே மந்திரிகளின் தவறுகளை கண்டித்தார்கள், மந்திரிகள் திருந்தினர், அரசர் பொறுத்த மற்ற ஒருவரை நீதிபதியாக நியமித்த போது இதற்காக அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டியது வரும் என பயானில் எச்சரித்தார்கள், அரசர் அழுப படியே தன்னுடைய தவறை சரி செய்து கொண்டார்.

ஜீலானி ரஹ் அவர்களை ஒரு மாதிர் சிந்திக்கும் இன்றைய இளைஞர்கள் ஜீலானி ரஹ் அவர்களின் சேவையையும் துணிச்சலையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

எத்தகை மகத்தான காலத்திற்கு தேவையான சேவையை செய்து முஸ்லிம்களை இஸ்லாமிய வழிக்கு அவர் கொண்டு வந்தார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அவ்வாறு அவர்கள் செய்த சேவையின் மரியாதை புரிந்து கொண்ட காரனத்தால் தான் உலகின் எந்தப் பகுதியிலும் அவர் ஷைகு என்று அழைக்கப்பட்டார்கள்.
சுமார் 35 க்கும் மேற்பட்ட நூல்களை ஷைகு எழுதியுள்ளார்கள் அதிலு குறிப்பிடத்தக்க மூன்று நூட்கள்

·         الغُنية لطالبي طريق الحق: وهو من أشهر كتبه في الأخلاق والآداب الإسلامية وهو جزءان.
·         الفتح الرباني والفيض الرحماني: وهو من كتبه المشهورة وهو عبارة عن مجالس للشيوخ في الوعظ والإرشاد.
·         فتوح الغيب : وهو عبارة عن مقالات للشيخ في العقائدوالإرشاد ويتألف من 78 مقالة.

மக்களின் சிந்தனையை புடம் போட்ட பன்னூற்றுக் கணக்கான அறிவுரைகளை வழங்கினார்கள். அவற்றில் சில

குர் ஆன் ஹதீஸ் எனும் இரு சிறகுகளை கொண்டு சத்தியத்தை நோக்கிப் பற!
உலக ஆசையை உங்களது இதயத்திலிருந்து கைகளுக்கு வெளியேற்றினீர்கள் எனில் அது உங்களுக்கு இடையூறளிக்க முடியாது,
இஸ்முல் அஃலம் என்பது மற்றெந்த சிந்தனையும் இல்லாமல் அல்லாஹ் என்று சொல்லுவதாகும்/
உங்களின் இதய வாசலின் காவலாளியாக இருங்கள். அல்லாஹ் அனுமதித்த உள்ளே விடுங்கள். தடுத்தை வெளியேற்றி விடுங்கள். மனோ இச்சையை அனுமதிக்காதீர்கள், அழிந்து விடுவீர்கள்.
ஒருவரைப் பற்றி தப்பாக எண்ணம் கொண்டு கூட அவருக்கு அநீதி இழைத்து விடாதீர்கள் , அல்லாஹ் அநீதையை மன்னிப்பதில்லை.
தகுதியானவனுக்கு தகுதி அற்றவனுக்கும் உதவி செய்யுங்கள். கூலி தருவது அல்லாஹ்வே,
நன்மைகள் அனைத்தும் பரிசீலித்தேன், உணவு கொடுப்பதை விட சிறந்த நன்மையாக எதுவும் எனக்கு தெரியவில்லை. இந்த உலகம் என் கையில் இருந்தால் அதை வைத்து பசித்தவர்களுக்கு உணவளித்து விடுவேன்.
மூன்று விச்யங்கள் உனது நேரத்தை வீணடித்து விடும்
1.   தவறிப்போனதைப் பற்றி கவலைப் படுவது அது திரும்பவராது,
2.   பிறரோடு உன்னை ஒப்பிட்டுப் பார்ப்பது அது பயனளிக்காது
3.   எல்லா மனிதர்களை திருப்திப் படுத்த நினைப்பது அது நடக்காது

·          : طِر إلى الحق بجناحى الكتاب والسنة.
·         وقال: أخرجوا الدنيا من قلوبكم إلى أيديكم فإنها لا تضرُّكم.
·         وقال : الاسم الأعظم أن تقول الله وليس في قلبك سواه
·         وقال : كونوا بوَّابين على باب قلوبكم ، وأدخلوا ما يأمركم الله بإدخاله، وأخرجوا ما يأمركم الله بإخراجه، ولا تُخلوا الهوى قلوبكم فتهلكوا.
·         وقال : لا تظلموا أحداً ولو بسوء ظنِّكم فإنَّ ربَّكم لا يجاوز ظلم ظالم.
·         وقال : إعمل الخير لمن يستحق ولمن لا يستحق و الاجر على الله
·         وقال : فتشت الأعمال كلها ، فما وجدت فيها أفضل من إطعام الطعام ، أود لو أن الدنيا بيدي فأطعمها الجياع .
·         وقال : ثلاث امور تضيّع بها وقتك: التحسّر على ما فاتك لأنه لن يعود، ومقارنة نفسك بغيرك لأنه لن يفيد، ومحاولة إرضاء كل الناس لأنه لن يكون

இறை நேசர்களின் தலைவராக ஜீலானி ரஹ் கருதப்படுவதற்கு இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவை

அவர்களது காலத்தில் தரீக்காக்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து தரீக்காக்களின் ஷைகு மார்களை வரவழைத்து பெரும் தரீக்கா மாநாடு நடத்தினார்கள்., அதில் தரீக்கத் என்ற பெயரில் மாக்கத்திற்கு முரணாக நடக்க கூடாது என்பதை வலியுறுத்திய பிறகு அனைத்து தரீக்காக்களும் பிற நடைமுறையை குறை கூறாமல் நடந்து கொள்ளும் வழி முறைக்கு வித்திட்டார்கள்,
இதனால் பல தரீக்காககள் ஒன்றினைந்தன, ஒருவர் பல தரீக்காகளின் நடைமுறையை பின்பற்றும் சுமூகமும் ஏற்பட்டது,

இந்த சூழ்நிலைக்குப் பிறகு அனைத்து தரப்பானும் ஜீலானி ரஹ் அவர்களை ஷைகுனா வ ஷைகு கும் என்று அழைத்தனர்.

இரண்டாவது அதிகமான கராமத்துக்கள் ஜீலானி ரஹ் அவர்களிடமிருந்து வெளிப்பட்டன. அது கண்ட மக்கள் அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டனர்.  

·         قال الإمام النووي : ما علمنا فيما بلغنا من التفات الناقلين وكرامات الأولياء أكثر مما وصل إلينا من كرامات القطب شيخ بغداد محيي الدين عبد القادر الجيلاني، كان شيخ السادة الشافعية والسادة الحنابلة ببغداد وانتهت إليه رياسة العلم في وقته, وتخرج بصحبته غير واحد من الأكابر وانتهى إليه أكثر أعيان مشايخ العراق وتتلمذ له خلق لا يحصون عدداً من أرباب المقامات الرفيعة,
·          وكان جميل الصفات شريف الأخلاق كامل الأدب والمروءة كثير التواضع دائم البشر وافر العلم والعقل شديد الاقتفاء لكلام الشرع وأحكامه معظما لأهل العلم مُكرِّماً لأرباب الدين والسنة, مبغضاً لأهل البدع والأهواء محبا لمريدي الحق مع دوام المجاهد ولزوم المراقبة إلى الموت. وكان له كلام عال في علوم المعارف شديد الغضب إذا انتهكت محارم الله سبحانه وتعالى سخي الكف كريم النفس على أجمل طريقة. وبالجملة لم يكن في زمنه مثله 
வபாத்து.

توفي الإمام الجيلاني ليلة السبت 10 ربيع الثاني سنة 561 هـ،جهزه وصلي عليه ولده عبد الوهّاب في جماعة من حضر من أولاده وأصحابه، ثم دفن في رواق مدرسته، ولم يفتح باب المدرسة حتى علا النهار
அப்பாஸிய கலீபா காரூன் ரஷீது ஈரானுக்கு சென்ற இடத்தில் வபாத்தாகி அங்கே அடக்கம் செய்யப்பட்டார். பிற்காலத்தில் பக்தாதின் மன்னர் இராண் நாட்டு மன்னரிடம் ஹாரூன் ரஷீதின் உடலின் மிச்சங்களை தருமாறு கேட்ட போது அதற்கு பதிலாக தமதூரைச் சேர்ந்த ஜீலானியின் மிச்சங்களை தருமாறு ஈரான் மன்னர் கேட்டார். பக்தாது மன்னர் அஹ்மது ஹஸன் அல் பிக்ர் மறுத்து விட்டார்,



No comments:

Post a Comment