வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 01, 2011

ஆஷூரா - அக்கிரம அரசியலின் முடிவு


முஹர்ரம் யுத்தம் தடை செய்யப்பட்ட சிறப்பிற்குரிய 4 மாதங்களில் ஒரு மாதமாகும்.
إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللّهِ اثْنَا عَشَرَ شَهْراً فِي كِتَابِ اللّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَات وَالأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ
أن الله حرم الأشهر الحرم الأربعة وهي الثلاثة المتوالية: ذو القعدة، وذو الحجة، والمحرم، والشهر الرابع المفرد: رجب
·          شهر الله المحرم  என்று சொல்லப் படுவதுண்டு

ரமலானுக்குப் பின் வணக்க வழிபாடுகளுக்கு சிறந்த காலம், முஹர்ரம்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ وَأَفْضَلُ الصَّلَاةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلَاةُ اللَّيْلِ– مسلم 1982
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيُّ الصِّيَامِ أَفْضَلُ بَعْدَ شَهْرِ رَمَضَانَ قَالَ شَهْرُ اللَّهِ الَّذِي تَدْعُونَهُ الْمُحَرَّمَ – إبن ماجة 1732
முஹர்ரம் மாதத்தின் மற்றொரு சிறப்பம்சம். அதனுடைய 10 வது நாள். ஆஷூரா.  

ஆஷுரா என்றால் மகத்துவம் மிக்க 10 ம் நாள் என்று பொருள். அது முஹர்ரம் 10 நாளை குறிக்கிறது.
·         قال  القرطبي وهو: عاشوراء معدول عن عاشرة للمبالغة والتعظيم، وهو في الأصل صفة لليلة العاشرة،

9 – 10 இரு நாட்கள் நோன்பு சுன்னத்து.

முஹர்ரம் பிறந்தவுடன் இரண்டு நோன்புக்கு தயாராகி விடு!
·       عَنْ الْحَكَمِ بْنِ الْأَعْرَجِ قَالَ انْتَهَيْتُ إِلَى ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا وَهُوَ مُتَوَسِّدٌ رِدَاءَهُ فِي زَمْزَمَ فَقُلْتُ لَهُ أَخْبِرْنِي عَنْ صَوْمِ عَاشُورَاءَ فَقَالَ إِذَا رَأَيْتَ هِلَالَ الْمُحَرَّمِ فَاعْدُدْ وَأَصْبِحْ يَوْمَ التَّاسِعِ صَائِمًا قُلْتُ هَكَذَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُهُ قَالَ نَعَمْ – مسلم 1915

·       عن  أَبِي قَتَادَةَ - رضي الله عنه: ((وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ))  صحيح مسلم (1982).
·       عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَرَأَى الْيَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ مَا هَذَا قَالُوا هَذَا يَوْمٌ صَالِحٌ هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ فَصَامَهُ مُوسَى قَالَ فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ  
·       عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلَّا هَذَا الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ  - البخاري 2006
சஹாபாக்களின் ஆர்வம். குழந்தைகளும் நோன்பு
·       فعن الربيّع بنت معوذ قالت أرسل النبي صلى الله عليه وسلم غداة عاشوراء إلى قرى الأنصار: " من أصبح مفطراً فليتم بقية يومه، ومن أصبح صائماً فليصم" قالت: فكنا نصومه بعد ونصوم صبياننا ونجعل لهم اللعبة من العهن، فإذا بكى أحدهم على الطعام أعطيناه ذاك حتى يكون عند الإفطار. البخاري:1960.
மக்காவிலும் இந்தப் பழக்கம் இருந்த்து.

·       عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانُوا يَصُومُونَ عَاشُورَاءَ قَبْلَ أَنْ يُفْرَضَ رَمَضَانُ وَكَانَ يَوْمًا تُسْتَرُ فِيهِ الْكَعْبَةُ فَلَمَّا فَرَضَ اللَّهُ رَمَضَانَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ شَاءَ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ وَمَنْ شَاءَ أَنْ يَتْرُكَهُ فَلْيَتْرُكْهُ
·       عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ يَوْمَ عَاشُورَاءَ كَانَ يُصَامُ فِي الْجَاهِلِيَّةِ فَلَمَّا جَاءَ الْإِسْلَامُ مَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ تَرَكَهُ – مسلم
·    وكان أهل الكتاب يصومونه، وكذلك قريش في الجاهلية كانت تصومه. قال دلهم بن صالح: قلت لعكرمة: عاشوراء ما أمره؟ قال: أذنبت قريش في الجاهلية ذنباً فتعاظم في صدورهم فسألوا ما توبتهم؟ قيل: صوم عاشوراء يوم العاشر من محرم.
இந்த ஹதீஸிலிருந்து கிடைக்கும் மற்றொரு தகவல் கஃபாவின் திரை பற்றியது.
ويستفاد من الحديث أيضا معرفة الوقت الذي كانت الكعبة تكسى فيه من كل سنة وهو يوم عاشوراء , وكذا ذكر الواقدي بإسناده عن أبي جعفر الباقر أن الأمر استمر على ذلك في زمانهم , وقد تغير ذلك بعد. فصارت تكسى في يوم النحر , وصاروا يعمدون إليه في ذي القعدة فيعلقون كسوته إلى نحو نصفه , ثم صاروا يقطعونها فيصير البيت كهيئة المحرم , فإذا حل الناس يوم النحر كسوه الكسوة الجديدة .

முன்னோர்களின் ஆர்வம்
·       كان بعض السلف يصومون يوم عاشوراء في السفر، ومنهم ابن عباس وأبو إسحاق السبيعي والزهري،
·       وكان الزهري يقول: " رمضان له عدة من أيام أخر، وعاشوراء يفوت، ونص أحمد على أنه يصام عاشوراء في السفر".   
ஆஷூராவில் மற்றொரு சுன்னத்து
·       والسنة في صوم هذا اليوم أن يصوم يوماً قبله أو بعده؛ لقول رسول الله صلى الله عليه وسلم: "لئن بقيت إلى قابل لأصومن التاسع" رواه مسلم.
·       عن عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا :  قال  حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللَّهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
·       وقد ذكر بعض الفقهاء أن صيام عاشوراء ثلاث مراتب:
·         1ـ صوم التاسع والعاشر والحادي عشر.
2
ـ صوم التاسع والعاشر.
3
ـ صوم العاشر وحده.
ஆசூராவின் சிறப்பிற்கு காரணம் :
وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون(50)  البقرة

سورة الأعراف تحدث عن تاريخ موسي

عن ابن عباس رضي اللهم عنهمما قال لما قدم النبي صلى اللهم عليه وسلم المدينة وجد اليهود يصومون عاشوراء فسئلوا عن ذلك فقالوا هذا اليوم الذي أظفر الله فيه موسى وبني إسرائيل على فرعون ونحن نصومه تعظيما له فقال رسول الله صلى اللهم عليه وسلم نحن أولى بموسى منكم ثم أمر بصومه- * بخاري  3649

மூஸா (அலை) அவர்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான யூதர்கள் பிர் அவ்னின் கொடுமையிலிருந்து செங்கடல் பிளந்து பாதுகாக்கப் பட்டார்கள். அதே கணத்தில் பிரவ்னும் அவனது படைகளும் மூழ்கடிக்கப் பட்ட்டார்கள்.

சிரியாவின் கனான் பகுதியில் வாழ்ந்த யாகூப் (அலை) அவர்களின் பிளைகளுக்கு யூதர்கள்கள்- இஸ்ரேலியர்கள் – பனூ இஸ்ராயீல் என்று பெயர். யூசுப் (அலை) அவர்கள் மூலமாக யூதர்கள் அனைவரும் எகிப்தில் குடியேறி ராஜ வாழ்க்கை வாழ்ந்தனர். அவர்கள் அக்கிரமம் செய்யத் தொடங்கவே எகிப்தின் உள்ளூர்வாசிகளான கிப்திகள் யூதர்களை அடக்கி அவர்களை  அடிமைகளாக்கி கடுமையான வேலைகளை வாங்கியதோடு கடும் தொல்லைகளும் கொடுத்தனர். அவர்களை மீட்க மூஸா (அலை) அனுப்ப்பட்டார்.

யாகூப் நபியுடன் அவரது குடும்பத்தினர் சுமார் 63 பேர் எகிப்தில் குடியேறியதாக இன்னு மஸ்வூத் (ரலி) கூறினார்.   மூஸா (அலை) மீட்ட போது யூதர்கள் 6 இலட்சம் பேராக பெருகி இருந்தனர் என்று வரலாற்றின் ஒரு தகவல் சொல்கிறது.

ஆறு இலட்சம் பேர் மிக அற்புதமாக மீட்கப்பட்டனர்.

யூதர்கள் நடந்து செல்ல வசதியாக  கடலில் 12 பாதைகள் ஏற்பட்டதாகவும் . யூதர்கள் பயப்படாமல் இருக்க ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் வகையில் அந்தப் பாதைகளுக்கு இடையே இருந்த சுவர் கண்ணாடி போல இருந்த்தாகவும் மஆரிபுல் குர் ஆன் ஆசிரியர் முப்தி முஹம்மது ஷபீ சாஹிப் கூறுகிறார்.  

ஆஷூரா ஈமானிய நாட்களில் ஒரு நாள். சிறந்த நாள்.
அச்சத்தின் விளிம்பில் மூஸாவை நம்பியவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்
فَلَمَّا تَرَاءا الْجَمْعَانِ قَالَ أَصْحَـابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ) [الشعراء:61

அல்லாஹ்வின் உதவிக்கு சில தனிச்சிறப்புக்கள் உண்டு
·         வெற்றிக்கான காரணிகளை நாம் கற்பனை கூட செய்ய முடியாது.
·         முழுமையான வெற்றி. அதன் பிறகு வேறு கவலை இருக்காது.

யூதர்கள் காப்பாற்றப் பட்டார்கள் என்பது மட்டுமல்ல. அவர்கள் கண் முன்னிலையிலேயே பிர் அவ்னும் அவனுடைய ஆட்களும் அழிக்கப் பட்டார்கள். அதற்குப் பிறகு யூதர்கள் பயப்பட்த் தேவையிருக்கவில்லை.

ஏராளமான தொல்லைகள், சதிச் செயல்கள், அவமரியாதைகளால் முஸ்லிம் உலகு நிராசையின் விளிம்பில் நிற்கிற சூழ்நிலையில் ஆஷூரா வருகிறது.
சமுதாயம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் சக்திக்கு முன்னாள் எந்தச் சக்தியும் வெற்றிபெற முடியாது.
அல்லாஹ் நினைத்தால் அது நடந்தே விடும், சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் சரி
وَلَيَنصُرَنَّ اللَّهُ مَنْ يَنصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ) [الحج:40].
அல்லாஹ்வின் வாக்குறுதி கிடைத்தே தீரும் என்பதில் முஃமின்களுக்கு தடுமாற்றம் கூடாது. அக்கிரமச் சக்திகளின் கை ஓங்குவது கண்டு அவர்கள் சஞ்சல மடையவும் கூடாது.
إنها سُنَّةٌ من سنن الله التي لا تتبدل ولا تتغير،
மூஸா ( அலை) வரலாறு 21 ம் நூற்றாண்டிலும் திருப்பத்தை ஏற்படுத்தும்.

ஆசூரா தரும் முக்கிய பாடம் 

அரசியல் என்பது நீதியை நிலை நாட்டுவதற்காக, மக்களுக்கு நன்மை செய்வதற்காக அவர்களுக்கு உதவுவதற்காக அமைய வேண்டும். அப்படி அமைந்தால் சின்ன இயக்கம் கூட பெரிய அரசியல் சக்தியாக வளரும். 
 யூசுப் (அலை) எகிப்தில் அடிமையாக விற்கப்பட்டார். ஆனால் அவரிடம் இந்த உணர்வு இருந்த்தால் அவரும் அவருடை குடும்பத்தினரும் எகிப்தின் அரசர்களாக உயர்ந்தார். புகழ் பூக்க வாழ்ந்தார்கள். 


அரசியல் என்பது சுயநலத்திற்கானதாக ஆக்ரமிப்பு எண்ணம் கொண்டதாக மக்களை நியாயமற்ற முறையில் அடக்கியாள்வதாக இருக்குமென்றால் அந்த அரசியல் எவ்வளவு வல்லாட்சியாக இருந்தாலும் சில நாட்களில் அது அழியும். பிர் அவ்னுடைய அரசியல் இப்படித்தான் முடிவுக்கு வந்தது. 


அரசியலில் ஈடுபட நினைக்கிற யாரும் மறந்து விடக்கூடாத பாடம் இது. 

மக்களுக்கு இன்னும் ஒரு செய்தி இருக்கிறது 
அரசியல் ரீதியாக ஒடுக்கப்படுகிற மக்கள் , கொடூரமாக ஆக்ரமிக்கப்படுகிறவர்கள், தொல்லைக்குள்ளாகிறவர்கள் ஒன்று பட்டு ஓரணியில் திரண்டால் - இன்றைக்கு அல்லது நாளை அவர்களுக்கு விடுவு கிடைக்கும். புது வாழ்வு பிறக்கும். யூதர்களுக்கு கிடைத்தது போல.

இந்த ஆண்டு ஆஷூரா நாள் டிஸம்பர் 6 ம் தேதி வருகிறது. நாம் ஆஷூராவையும் மறக்க முடியாது. டிஸம்பர் 6 மறக்க முடியாது.

400 ஆண்டுகள் பழமையான பாபரி மஸ்ஜிதை ஆரசியல் ஆதாயத்திற்காக இந்துத்துவ சக்திகள் உடைத்தார்கள். பிர் அவ்ன் தன்னுடைய ஆதாயத்திற்காக யூத குழந்தைகளை கொன்றது போ.   

பாபரி மஸ்ஜிதை உடைத்தவர்கள் – இப்போது ஆதிக்கம் பெற்றுத்திகழ்வது போல தோன்றலாம். ஆனால் ஒருநாள் அவர்கள் காணாமல் போவார்கள்.
அநீதி நிலைத்த்தாக உலகில் சரித்திரம் இல்லை

இந்திய அரசு பாபரி மஸ்ஜிதை உடைத்தவர்களை கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர அக்கறை செலுத்த வேண்டும்.

அங்கே மீண்டும் பள்ளி வாசல் கட்ட முஸ்லிம்களை அனுமதிக்க வேண்டும்.

அதை விட்டு விட்டு அரசும் அரசின் உளவுத்துறையினரும் மேலும் முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

டிஸம்பர் 6 நெருங்குகிற போது ஒவ்வொரு வருடமும் நாட்டின் ஏதாவது ஒரு மூளையில்  சில முஸ்லிம் இளைஞர்களை கைது செய்யப்படுவார்கள். அவர்கள் இந்தியாவை தகர்க்க சதி செய்தார்கள் என்று பரபரப்பாக அறிக்கை வெளியாகும். பிறகு அதில் என்ன நடந்த்து ஏது நடந்த்து என்பது வெளிப்படாமலே போகும்.

இந்த ஆண்டும் சமீபத்தில் 6 இளைஞர்களை கைது செய்து நாங்கள் இருக்கிறோம் என்பதை இந்திய உளவுத்துறை வெளிக்காட்டியிருக்கிறது.

தமிழகத்தில் அதவானியின் வருகையை ஒட்டி அவரைக் கொல்லுவதற்கு குண்டு வைத்தார்கள் என்ற பெயரில் பலரையும் போலீஸ் கைது செய்துள்ளது. பெரும்பாலும் எந்த அமைப்போடும் சேராமல் தனியாக இருக்கிற இளைஞர்களைப் பார்த்து போலீஸ் கைது செய்திருக்கிறது. முஸ்லிம்களை கேட்பாரற்றவர்களாக கருதுகிற மன்ப்போக்கு தமிழக்ததில் அதிகமாகவே இருக்கிறது. அத்வானியை கொல்ல தயார் செய்யப் பட்ட குண்டு எப்படிப் பட்ட்து என்பதை இதுவரை உளவுத்துறை மக்களுக்கு விளக்வில்லை. அதன் சக்தி என்ன? எப்படி தயாரிக்கப் பட்டுள்ளது? எதையும் வெளியிட வில்லை. முதலில் குவாரிக்கு வெடி பொருள் சப்ளை செய்யும் ஒருவர்ர கைது செய்தார்கள்.பிறகு என்ன நிர்பந்தம் ஏற்பட்ட்தோ தெரியவில்லை. சில முஸ்லிம் இளைஞர்களை கைது செய்துள்ளர்ர்கள். இன்னும் முக்கியமான சிலரை தேடிவருவதாக கூறுகிறார்கள். தமிழக போலிஸூக்கு அவர்கள் தயாரிக்கும் அறிக்கையே வேதம மந்திரமாக இருக்கிறது.  

ஒரு முறை பாபரி மஸ்ஜித உடைக்கப் பட்ட்து என்றால் இப்போது ஒவ்வொரு ஆண்டு டிஸம்பர் 6 வருகிற போதும் இந்திய உளவுத்துறை முஸ்லிம்களின் மரியாதையை தகர்க்கிற வேலையை செய்து வருகிறது.

உளவுத்துறையின் இந்தப் போக்கு குறித்து முஸ்லிம்கள் உஷாரடைய வேண்டும். நீதித்துறையை சரியாகவும் விரைவாகவும் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.  

முஃமின்கள் ஈமானில் உறுதியோடும் தெளிவோடும் கட்டுப்பாட்டோடும் இருந்தால் அல்லாஹ்வின் வெற்றி மீண்டும் வரும். இன்ஷா அல்லாஹ்.

மேலதிக தகவல்களுக்கு கீழே சொடுக்கி வாசிக்கவும்
 ஊர்வலங்களில்.. இஸ்லாம்..

No comments:

Post a Comment